கேரள மாநிலம், கோட்டயத்தில் 10 வயது சிறுமி, அவரது வீட்டின் அருகில் உள்ள 74 வயது மளிகைக் கடைக்காரரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
சிறுமி முதியவரின் கடைக்கு பொருள்கள் வாங்க சென்று வந்த நிலையில், சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதுடன் அவரிடம் இனிப்புகள் வழங்கி இவ்விஷயம் குறித்து யாரிடமும் பேசக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அடுத்தடுத்த நாள்களில் சிறுமி சோர்வாகக் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் அவரிடம் விசாரித்ததில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து முதியவர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.