மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தின் நடைபாதையில் நேற்று (ஏப்ரல் 19) குழந்தையுடன் பெண் ஒருவர் நடந்துகொண்டிருந்போது, தவறுதலாக ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் குழந்தை தவறிவிழுந்தது.
அதேநேரத்தில், புறநகர் ரயில் ஒன்று அதே தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. இச்சூழலில் குழந்தையின் தாயார் பார்வை மாற்றுத்திறனாளி என்பதால், குழந்தையை மீட்க முடியாமல் திண்டாடிய நிலையில், அங்கு பணியில் இருந்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவு என்பவர் துரிதமாக ஓடிச்சென்று குழந்தையை தண்டவாளத்தின் பக்கவாட்டில் இருந்து நடைபாதையில் ஏற்றிவிட்டு, தானும் தப்பித்துக்கொண்டார். நொடிப்பொழுதில் நடந்தேறிய இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.