தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தனியாக வரும் பெண்கள் பாதுகாப்புடன் வீடு செல்ல ஏற்பாடு - நமச்சிவாயம் - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரிக்கு இரவு நேரம் தனியாக வரும் பெண்கள் பாதுகாப்புடன் வீடு செல்ல ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Namasivayam
Namasivayam

By

Published : Sep 4, 2021, 6:48 AM IST

புதுச்சேரி: தனியாக வரும் பெண்கள், பெண் காவலர் ஒருவர் உதவியுடன் நான்கு சக்கர வாகனத்தில் அவர்களது வீடுகளுக்கே கொண்டுசென்று விடப்படுவார்கள் என சட்டப்பேரவையில் உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி காவல் துறையின் மானியக் கோரிக்கையின் மீது நமச்சிவாயம் பேசினார்.

அப்போது அவர், "நமது புதுச்சேரி மாநில மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதைத் தடுத்து கஞ்சா பழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, புதுச்சேரி காவல் துறை மூலம் ஆப்பரேஷன் விடியல் என்ற பெயரில் 2021 ஜூலை 19 முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கஞ்சா விற்பவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், கஞ்சா பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வையும் புதுச்சேரி காவல் துறை ஏற்படுத்திவருகிறது.

மேலும், கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர்களை அவர்களின் பெற்றோர், பாதுகாவலர் உடன் காவல் நிலையங்களுக்கு வரவழைத்து அவர்களுக்கு அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை வெளியூர்களிலிருந்து புதுச்சேரிக்குத் தனியாக வரும் பெண்களை, பெண் காவலர் ஒருவர் உதவியுடன் நான்கு சக்கர வாகனத்தில் அவர்களது வீடுகளுக்கே கொண்டுசென்று விட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details