தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 23, 2022, 1:12 PM IST

ETV Bharat / bharat

"ராகுல் ஷெவாலே மீதான பாலியல் புகார்களை விசாரிக்க SIT அமைத்திடுக" - நீலம் கோர்ஹே வலியுறுத்தல்!

சிவசேனா எம்.பி ராகுல் ஷெவாலே மீதான பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என மகாராஷ்டிரா சட்டப்பேரவை துணைத் தலைவர் நீலம் கோர்ஹே வலியுறுத்தினார்.

mh
mh

நாக்பூர்: மகாராஷ்ட்ராவில் ஏக்நாத் ஷிண்டே ஏற்படுத்திய அரசியல் குழப்பத்தால், சிவசேனா இரண்டாக உடைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாஜகவின் ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அமைந்தது.

இதனிடையே கடந்த ஜூலை மாதம், ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த சிவசேனா எம்.பியான ராகுல் ஷெவாலே மீது துபாயைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். எம்.பி ராகுல் ஷெவாலே, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உடலுறவு கொண்டு, பிறகு தன்னை ஏமாற்றிவிட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஷிண்டேவுக்கும் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில், நேற்று(டிச.22) ராகுல் ஷெவாலே மீதான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சிவசேனா எம்எல்சிகளான அனில் பராப் மற்றும் மனிஷா கயண்டே இருவரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதால், இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அப்போது சிவசேனா மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு அவை மீண்டும் கூடியபோது, எம்.பி ராகுல் ஷெவாலே மீதான பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சட்டப் பேரவை துணைத் தலைவர் நீலம் கோர்ஹே வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details