ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர்-பஞ்சாப் எல்லையில் உள்ள ரஞ்சித் சாகர் அணையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், இரண்டு விமானிகள் இருந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்த தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவ வீரர்களும் விபத்து நடந்த இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அணையின் ஆழம் 500 அடிக்கும் மேலிருப்பதாலும், தற்போது அங்கு மோசமான வானிலை நிலவுவதாலும் நீர்மூழ்கி வீரர்கள் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.