தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு! - தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதியில் ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் 2 நாள்களாக காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு!
திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு!

By

Published : May 29, 2022, 12:13 PM IST

ஆந்திரா:முக்கிய வைணவ ஸ்தலமான திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் குவிந்தது. கரோனா ஊரடங்கிற்கு பின் கோயில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, திருப்பதி முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த மாதத்தின் ஏகாதசியை முன்னிட்டு, கருட சேவை தரிசனத்தைக் காண பக்தர்கள் 48 மணி நேரமாக வரிசையில் நின்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

அதிக பக்தர்கள் கூட்டத்தால் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு அதிக நேரம் எடுத்தது. வைகுண்ட தரிசனத்திற்கான வரிசை சுமார் 2 கி.மீ அளவுக்கு நீண்டு காணப்பட்டது. மேலும், சர்வ தரிசனத்திற்கான வரிசை வெங்கமாம்பா அன்னதான சத்திரத்தையும் தாண்டி சென்றது. மேலும் அன்னதான வளாகத்தில் இருக்கும் 32 கம்பார்ட்மெண்டுகள் மற்றும் தோட்டம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தேவஸ்தான தரிசனத்திற்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட் நிறுத்தப்பட்டு பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும் குழந்தைகளுக்கான பால், பக்தர்களுக்கு உணவு என அனைத்தும் வரிசையில் நிற்கும்போது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருப்பதியில் கூட்ட நெரிசல்; இலவச தரிசனம் செய்ய 40 மணிநேரமாக பக்தர்கள் காத்திருப்பு!

ABOUT THE AUTHOR

...view details