தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 29, 2022, 10:12 AM IST

ETV Bharat / bharat

தலைமறைவாக இருந்த கடத்தல்காரர்...கைதானது எப்படி..?

மும்பையில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைபொருள் கடத்தல்
போதைபொருள் கடத்தல்

மும்பை: மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் சாஹில் ஷா அலியாஸ் ஃப்ளாக்கோ (31). போதை பொருள் கடத்தல்காரரான இவர், தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று (ஜன 28) துபாயிலிருந்து மும்பை திரும்பிய போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மறனத்தில், குற்றம்சாட்டபட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, இவரது பெயர் குறிப்பிடப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

எனவே கடந்த ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கு குறித்தும், சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்தும் சாஹில் ஷா-விடம் விசாரிக்க உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கத்தி முனையில் வீடியோ - பாதிக்கப்பட்ட இளம்பெண் பரபரப்பு புகார்

ABOUT THE AUTHOR

...view details