தமிழ்நாடு

tamil nadu

அஜித் தோவல் வீட்டுக்குள் ஊடுருவ முயன்ற நபர் கைது

By

Published : Feb 16, 2022, 3:23 PM IST

தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இல்லத்திற்குள் ஊடுருவ முயன்ற நபரை டெல்லி காவல்துறை கைது செய்து விசாரித்துவருகின்றது.

NSA Doval
NSA Doval

நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவிவகித்துவருபவர் அஜித் தோவல். டெல்லியில் உள்ள இவரது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைய முயற்சி செய்த சம்பவம் இன்று காலை அரங்கேறியுள்ளது.

அவரை தடுத்து நிறுத்திய வீட்டின் பாதுகாவலர், அவரை டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அந்நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

வாடகை காரில் அஜித் தோவல் வீட்டிற்கு வந்த அந்நபர், தனது தலையில் சிப் ஒன்று இருப்பதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். ஆனால் அது உண்மையல்ல என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், காவல்துறை அந்நபரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு - மக்கள் அச்சம்!

ABOUT THE AUTHOR

...view details