தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 24, 2021, 2:58 PM IST

ETV Bharat / bharat

மாமியார் மருமகள் சண்டையால் பறிபோன உயிர்

தனது தாயும், மனைவியும் தினமும் சண்டையிட்டுக் கொள்வதை தாங்கமுடியாத நபர் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Man ends life over mother-wife feud
Man ends life over mother-wife feud

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் பக்வாரா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபரின் மனைவியும், தாயாரும் தினமும் சண்டையிட்டுக் கொள்வதால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். மாடியிலிருந்து குதித்த அன்றும் அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் மாடியிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது.

கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, உயிரிழந்தவரின் சடலம் உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மனஉளைச்சலால் மட்டுமே அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details