சஹாரன்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், பெரோஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்தான் என்பவர், தன் 15 வயது மகளை, அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவர் காதல் வலையில் விழவைத்து கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்து போலீசார், தலைமறைவான சந்தீப் மற்றும் மைனர் பெண் ஆகியோரைத் தேடி வந்தனர். தலைமறைவான இருவர் பற்றி தகவல் கிடைக்காத நிலையில், சந்தீப் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் வலையில் சந்தீப் சிக்கி உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் சந்தீப் மற்றும் மைனர் சிறுமிக்கு 9 வயது மற்றும் 13 வயதில் இரு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.