தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா சிறுமி பாலியல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நபர் உயிரிழப்பு! - பல்லகொண்ட ராஜூ

தெலங்கானா சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் தேடப்பட்டுவந்த நபர், இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தெலங்கானா சிறுமி பாலியல் வழக்கு
தெலங்கானா சிறுமி பாலியல் வழக்கு

By

Published : Sep 16, 2021, 12:38 PM IST

தெலங்கானா மாநிலம், சையதாபத்தில் ஆறு வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் செப்.9ஆம் தேதி நடைபெற்றது.

இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பல்லகொண்ட ராஜூ என்ற 30 வயது நபர் தேடப்பட்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில், வரங்கல் மாவட்டம் கான்பூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது கைகளில் இருந்த டாட்டூக்கள் மூலம் காவல் துறையினர் அவரை அடையாளம் கண்டறிந்தனர். அவரது உடல் தற்போது உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.

தெலங்கானா சிறுமி பாலியல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நபர் மரணம்

முன்னதாக சிறுமியின் படுகொலை ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கிய நிலையில் சுவர்களில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் புகைப்படம் ஒட்டப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், இனி தான் தப்ப முடியாது என்று பல்லகொண்ட ராஜூ உணர்ந்ததை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:6 மாதங்களில் முடிவடையும் கரோனா: தேசிய நோய் தடுப்புத்துறை தகவல்

ABOUT THE AUTHOR

...view details