ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு மும்முனை போட்டி நடைபெறுகிறது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி என மூன்று முக்கிய தரப்புகள் இந்தத் தேர்தலில் களமிறகவுள்ளன. மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக அசுர பலத்துடன் வேலை செய்துவரும் நிலையில், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் முதலமைச்சர் மம்தா கடுமையாக விமர்சித்துவருகிறார்.