தமிழ்நாடு

tamil nadu

5 ரூபாய்க்கு உணவு; ஏழை மக்களின் துயரை துடைக்கும் 'மா' திட்டம்!

By

Published : Feb 15, 2021, 9:44 PM IST

கொல்கத்தா: ஏழை மக்களின் துயரைத் துடைக்கும் வகையில் மேற்குவங்கத்தில் 'மா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மம்தா
மம்தா

மேற்குவங்கத்தில், வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் அங்கு 'மா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் மம்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், சாப்பாடு, தால், காய்கறி, முட்டைக் குழம்பு ஆகியவை 5 ரூபாய்க்கு வழங்கப்படவுள்ளது. ஒரு பிளேட் உணவுக்கான மானிய தொகை 15 ரூபாயை மாநில அரசே ஏற்கும் என மம்தா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த உணவு தினமும் மதியம் 1 மணி முதல் 3 வரை வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் காண்டீன் அமைக்கப்படும் என்றார்

ABOUT THE AUTHOR

...view details