தமிழ்நாடு

tamil nadu

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2ஆம் கட்ட மண்டல பூஜை தொடங்கிய நிலையில், மகர விளக்கு பூஜைகள் தொடங்கி உள்ளன.

By

Published : Dec 31, 2022, 5:30 PM IST

Published : Dec 31, 2022, 5:30 PM IST

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் தொடக்கம்!
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் தொடக்கம்!

பத்தனம்திட்டா: கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, கார்த்திகை மாதம் முதல் விரதம் இருந்து இருமுடி கட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகள் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகளவு பக்தர்களால் சபரிமலை விழாக்கோலமாக காட்சி அளித்து வருகிறது.

இதன் முதல் கட்டம் கடந்த நவ.17 அன்று தொடங்கி டிச.27 அன்று மண்டல பூஜையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து 3 நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் மகரவிளக்கு விழாவுக்காக நேற்று (டிச.30) தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு ஐயப்பன் சன்னதியை திறந்தார். தொடர்ந்து மாளிகைபுரம் மேல்சன்னதியை ஹரிஹரன் நம்பூதிரி திறந்தார்.

இதனையடுத்து இன்று (டிச.31) அதிகாலை 3 மணியளவில் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வரும் ஜன.14ஆம் தேதி மகரவிளக்கு விழா நடைபெற உள்ளது. மேலும் ஜன.20ஆம் தேதி யாத்திரை காலம் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் சபரிமலை சன்னதி மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சபரிமலை கோயிலுக்கு 39 நாட்களில் சுமார் ரூ.223 கோடி வருவாய்; பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details