மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங், அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி வசூல் செய்து தர வேண்டும் என தன்னை வற்புறுத்தியதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரத்தை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தவிட்டது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் பதவியை அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து புதிய உள்துறை அமைச்சராக திலீப் வாஸ்லே பாட்டில் நியமிக்கப்பட்டுள்ளார்.