போபால்: தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், வெறும் இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 236 பேருக்கு உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் மாநில அரசுகள் தீவிர ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக ஒமைக்ரான் காரணமாக குஜராத் மாநில அரசு அகமதாபாத், காந்திநகர், சூரத், ராஜ்கோட், வடோதரா, பாவ்நகர், ஜாம்நகர், ஜுனகர் ஆகிய நகரங்களில் நள்ளிரவு 1 மணி அதிகாலை 5 வரை இரவு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிட்டது.