கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். இவர் மீது தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டு எழுந்த நிலையில், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிவசங்கர் மீது மூன்று வழக்குகள் பதிந்து தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை விசாரணை நடத்திவருகிறது.