புதுச்சேரி, கோரிமேடு, காமராசர் சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டை தாண்டியுள்ளது. இதுவரை 10,50,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி காரணமாக கரோனா பரவல் அலையிலிருந்து மக்கள் தப்பிக்கின்றனர். உலகத்திலேயே குழந்தைகளுக்கான தடுப்பூசி இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 2 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு போடப்பட உள்ளது. தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.