தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலின சமத்துவமின்மையை அகற்ற அனைவரும் முன்வர வேண்டும் - ராம்நாத் கோவிந்த் - பாலின சமத்துவமின்மை

டெல்லி : பாலின நீதியை நிலைநாட்டும்விதமாக பாலின சமத்துவமின்மையை அகற்ற மக்கள் அனைவரும் முன்வர வேண்டுமென குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

Let us collectively resolve to promote gender justice: President on Intl Women's Day
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

By

Published : Mar 8, 2021, 6:14 PM IST

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுமிகளுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சர்வதேச மகளிர் நாளன்று சக குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாட்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளைப் படைத்துவருகின்றனர்.

பாலின நீதியை மேம்படுத்துவதற்கும், ஆண்கள் பெண்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை அகற்றுவதற்கும் கூட்டாக முடிவெடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :'என்ஜினுக்கு வேலு நாச்சியாரின் பெயர்' - வடக்க ரயில்வே புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details