தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2022, 3:45 PM IST

ETV Bharat / bharat

பெங்களூரு பப்களில் நள்ளிரவு பார்ட்டியில் சிக்கிய 33 பேர் கைது!

பெங்களூருவில் நள்ளிரவு வரை வெறித்தனமாக பார்ட்டி கொண்டாடிய 33 பேர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

பெங்களூர் பப்களில் அதிரடி ரைடு விட்ட போலீஸார்- நள்ளிரவு பார்ட்டியில் சிக்கிய 33 பேர் கைது!
பெங்களூர் பப்களில் அதிரடி ரைடு விட்ட போலீஸார்- நள்ளிரவு பார்ட்டியில் சிக்கிய 33 பேர் கைது!

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பீமாநகர் காவல்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை (மே8) அன்று பப்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நள்ளிரவு தாண்டியும் பார்டி செய்த 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சோதனை நடத்திய ஓட்ஸ் பப்களில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து பெங்களூரு டிஜிபி பீமாசங்கர் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட 33 பேருக்கும் நடத்திய பரிசோதனையில் போதை மருந்து உட்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

இந்தப் பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளராக ஹரிகிருஷ்ணன் மற்றும் DJ செந்தில் ஆகியோர் மூன்று லட்சத்திற்கு போதை பொருள் விநியோகம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:மொஹாலியில் உள்ள பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை தலைமையகத்திற்கு வெளியே குண்டுவீச்சு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details