குஷிநகர்: உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் எட்டு வயது சிறுவன், தனது தந்தை மீது புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்றுள்ளான். காவல் நிலைய பொறுப்பாளர் உள்பட அனைத்து காவலர்களும் சிறுவனது புகாரை கேட்டனர்.
அப்போது சிறுவன், தனது தந்தை தினமும் குடித்துவிட்டு வருவதாகவும், அவரது குடிப்பழக்கத்தால் தான் மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளான். தந்தை குடித்துவிட்டு வருவதால் வீட்டில் பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே புகார் அளிக்க வந்ததாகவும் தெரிவித்தான். தனது தந்தையை குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தும்படியும் கோரினான்.