திருவனந்தபுரம்: கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் வரதட்சணைக் கொடுமை அதிகரித்துவருகிறது. ஒருபுறம் படித்த பெண்களே வரதட்சணை கொடுமைகளுக்கு உள்ளாகி தற்கொலை முடிவுக்கு செல்வதும், மறுபுறம் மணமுடித்து வந்த இளம்பெண்களை கணவர் குடும்பத்தார் தற்கொலைக்குத் தூண்டி உயிரைக் காவு வாங்குவதும் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் என்பவர், தனது மனைவி உத்ராவை பாம்பைப் பயன்படுத்தி கொலைசெய்ததாக 2020ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். முதல்கட்ட விசாரணையில், சூரஜ் திருமணத்திற்காக 100 பவுன் நகை, கார் உள்ளிட்டவை வரதட்சணையாக பெற்றதும்.