ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவிற்கு ரூ.16 கோடி விலையுள்ள ஊசி போட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சிறுவன் நீண்ட காலமாக முதுகெலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜெய்பூரில் உள்ள ஜேகே லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மதிப்புள்ள 'ஜோல்ஜென்ஸ்மா' ஊசி போட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சிறுவனுக்கு தற்போது 2 வயது உள்ளதால் ஊசிக்குப் பதிலாக வாய் வழியாக வழங்கப்படும் 'ரிஸ்டிப்லாம்' என்ற மருந்தை பரிந்துரைத்தனர்.