தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொதுமக்களுக்கு துப்பாக்கி பயிற்சி - கேரள போலீஸ் அதிரடி திட்டம்! - முழுமையான உடல் மற்றும் மன ஆரோக்கியம் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

பொதுமக்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை கேரள போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.

Kerala poilce
Kerala poilce

By

Published : Jun 7, 2022, 10:39 PM IST

கேரளா: கேரள காவல்துறை டிஜிபி அனில் காந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாதுகாப்புக்காக முறையாக உரிமம் பெற்று துப்பாக்கியை வைத்துக்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க காவல் துறை முடிவு செய்துள்ளது. துப்பாக்கி பயன்படுத்த உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் உரிமம் பெற விண்ணப்பித்திருப்பவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.

முதல் முறையாக துப்பாக்கியை கையாள்பவர்கள் ஐந்தாயிரம் ரூபாயும், ஏற்கெனவே சிறிதளவு பயிற்சி பெற்றவர்கள் ஆயிரம் ரூபாயும் செலுத்தி முழுமையான துப்பாக்கிப் பயிற்சியை பெறலாம். முழுமையான உடல் மற்றும் மன ஆரோக்கியம் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் பலருக்கு அவற்றை எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை என்றும், அவர்களுக்குப் பயிற்சி அளிக்க உத்தரவிடக் கோரியும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில், உரிமம் வைத்திருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும்படி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், துப்பாக்கி பயிற்சி அளிக்க கேரள காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: நூபுர் ஷர்மா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details