தமிழ்நாடு

tamil nadu

ஓணம் பண்டிகை... அரசு ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ்... கேரள அரசு அறிவிப்பு...

By

Published : Aug 29, 2022, 4:30 PM IST

Updated : Aug 29, 2022, 5:34 PM IST

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு நான்காயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

kerala
kerala

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என அம்மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நான்காயிரம் ரூபாய் ஓணம் பண்டிகை போனஸாக வழங்கப்படும் என்றும், போனஸ் பெறத்தகுதி பெறாத அரசு ஊழியர்களுக்கு 2 ஆயிரத்து 750 ரூபாய் ஓணம் பண்டிகை சிறப்புப் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு ஓணம் சிறப்புப் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஊதியத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் ரூபாயை பண்டிகைக் கால முன்பணமாக பெற்றுக் கொள்லலாம் என்றும், பகுதி நேர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆறாயிரம் ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கேரளாவில் நிலச்சரிவு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு...


Last Updated : Aug 29, 2022, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details