தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இனி ஐடி பார்க்குகளிலும் பப் நடத்திக்கோ' - ஒப்புதல் அளித்த கேரள அமைச்சரவை

கேரள ஐடி பார்க்குகளில் பார் மற்றும் பப் வசதி உள்ளிட்ட மாற்றங்களை உள்ளடக்கிய புதிய மது கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை இன்று (மார்ச் 30) ஒப்புதல் அளித்துள்ளது.

By

Published : Mar 30, 2022, 10:33 PM IST

Kerala Cabinet approves opening of pubs inside IT parks
Kerala Cabinet approves opening of pubs inside IT parks

திருவனந்தபுரம்:கேரளாவின் மிகவும் சர்ச்சைக்குரிய மதுக்கொள்கையை ஆண்டுதோறும் மாற்றியமைப்பது அம்மாநில அரசின் வழக்கம். இந்நிலையில், மாநிலத்தின் மதுக்கொள்கையில் புதிய மாற்றங்களைக்கொண்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உரிமத் தொகை அதிகரிக்கும்: புதிய கொள்கை முடிவில், 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐடி பார்க்குகளில் மட்டும் உரிமத்துடன் மதுபான பார்கள் மற்றும் பப்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, ஐடி பார்க்குகளில் கேரளாவில் பப்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதில்லை. மேலும், ஐடி நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை வைத்துதான் அந்நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐடி பார்க்குகளின் உள் அமைக்கப்படும் பார்களுக்கும், பப்களுக்கும் வெளியாட்கள் செல்ல அனுமதி கிடையாது. ஐடி பார்க் நிர்வாகம் தனியார்களிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்களையும், பப்களையும் அமைத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பார்களின் உரிமத்திற்கு வசூலிக்கப்படும் தொகையை விட, பப்களுக்கான தொகை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2 கடைகளுக்கு இடையிலான தூரம்: மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகளை (BEVCO) திறக்கவும், பார்கள் செயல்படும் நேரம் குறித்த மாற்றங்களைக் கொண்டு வரவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இரண்டு மதுபானக் கடைகளுக்கு இடையிலான தூர அளவுகோலையும் புதுப்பித்துள்ளது. இதேபோல், இரண்டு கள் விற்பனையகத்திற்கு இடையிலான தூர அளவுகோலையும் குறைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்றும் பார்கள் மற்றும் மதுபானக் கடைகள் மூடும் தற்போதைய நடைமுறையை மாற்றியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Video:கால்வாயில் பிடிபட்ட மலைப்பாம்பு - போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிச் சென்றதால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details