கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக இந்தியா சிக்கித் தவிக்கும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில மக்களுக்குப் பல்வேறு சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கரோனாவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பல்வேறு நிதிச் சலுகை - டெல்லி முதலமைச்சர் அதிரடி - டெல்லியில் கோவிட்-19 இரண்டாம் அலை
கோவிட்-19 தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினருக்குப் பல்வேறு நிதிச் சலுகை வழங்கி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அறிவிக்கப்பட்ட சலுகைகள்
- மாநிலத்தில் உள்ள 72 லட்சம் ரேஷன் அட்டை பயனாளர்களுக்கு இம்மாதம் 10 கிலோ இலவச ரேஷன் பொருள்கள்
- ஏழை மக்களுக்கு ரேஷன் அட்டை இல்லாமலேயே இலவச ரேஷன் பொருள்கள்
- கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 ஆயிரம் நிதியுதவி
- வீட்டில் சம்பாத்தியம் செய்யும் நபர் தொற்றால் உயிரிழந்தால் அந்த குடும்பத்தினருக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி
- கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துவாடும் குழந்தைகளுக்கு அதன் 25 வயது வரை மாதம் ரூ.2,500 உதவித்தொகை, இலவசக் கல்வி வழங்கப்படும்
இதையும் படிங்க:கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் மறுப்பு: பின்னணி என்ன?