உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் 12 அடி உயர ஆதி சங்கரர் சிலை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கிவைத்தார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "சில அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கேதர்நாத் இறைவனிடம் திருவடியில் நான் உணரும் விஷயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை.
2013ஆம் ஆண்டு வெள்ளத்தால் பெரும் சேதம் கண்ட கேதர்நாத், முன்னை விட சிறப்புடன் எழுந்து நிற்கிறது. இந்த புனரமைப்புத் திட்டங்களை ட்ரோன் கேமராக்கள் மூலமாக நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தேன்.