தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீர் செய்தியாளருக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது வழங்கல்

By

Published : Dec 12, 2022, 10:56 PM IST

காஷ்மீரை சேர்ந்த சமான் லத்தீப், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகள் குறித்து பிரபல பத்திரிகைகளுக்கு செய்திகளை வழங்கி வருகிறார்.

சமான் லத்தீப்
சமான் லத்தீப்

ஸ்ரீநகர்(ஜம்மு காஷ்மீர்):ஐ.நா. பருவ நிலை மாற்றத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பருவ நிலை மாற்றம் குறித்த செய்தி சேகரிப்பில் திறம்பட பணியாற்றியதாக காஷ்மீரைச் சேர்ந்த செய்தியாளர் சாமன் லத்தீப் என்பவருக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.

நியூ யார்க்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ், விருதை வழங்கினார். ஐ.நா அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

காஷ்மீரைச் சேர்ந்தவரான சமான் லத்தீப்புக்கு, வெண்கலப் பதக்கம், பணப் பரிசு, மொனாக்கோ இரண்டாம் இளவரசர் ஆல்பெர்ட் நினைவுப்பரிசு உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்திய நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நெருக்கடிகள் குறித்து சமான் லத்தீப் செய்திகளை வழங்கி வருகிறார். பிரிட்டன் டெலிகிராப், டி.டபிள்யூ ஜெர்மனி உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களுக்கு பருவ நிலை மாற்றம் குறித்து அவர் வழங்கிய 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள டெய்லி டெலிகிராஃப் செய்தி நிறுவனத்திற்கு பணியாற்றி வரும் சமான் லத்தீப் தெற்கு ஆசியா பிராந்தியத்தின் பிரதிநிதியாக கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க:இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல்

ABOUT THE AUTHOR

...view details