தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளி சீருடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுநீர் ஊற்றிய ஆசிரியர் - கொடூரச்சம்பவம் - சுடுநீர் ஊற்றிய ஆசிரியர்

கர்நாடகாவில் பள்ளி சீருடையில் ஓர் சிறுவன் மலம் கழித்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அச்சிறுவன் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சீறுடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுநீர் ஊற்றிய ஆசிரியர்
பள்ளி சீறுடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுநீர் ஊற்றிய ஆசிரியர்

By

Published : Sep 9, 2022, 10:36 PM IST

கர்நாடகா:பள்ளி சீருடையில் ஓர் சிறுவன் மலம் கழித்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர், அச்சிறுவன் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்.2ஆம் தேதியே நடந்த இந்தச் சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இருப்பினும், அச்சிறுவனின் பெற்றோருக்கு சில ஆதிக்க நபர்களால் எந்த விதப் புகாரும் அளிக்கக்கூடாது என மிரட்டல்கள் வந்துள்ளன.

இந்தச்சம்பவம் ரைச்சூர் மாவட்டத்தில் சந்தேகல்லூரிலுள்ள ஓர் ஆரம்பப்பள்ளியில் நடந்தேறியுள்ளது. அப்பள்ளியில் பணியாற்றும் ஹுலிகெப்பா எனும் ஆசிரியர் தான் இந்த இரக்கமற்றச்செயலை செய்துள்ளார். இதனால் சிறுவனின் உடலில் 40 விழுக்காடு எரிந்து போக வலியில் துடித்துள்ளான்.

தற்போது அவனை ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Video: சுற்றுலாப் பயணிகளை கதிகலங்க வைத்த யானை!

ABOUT THE AUTHOR

...view details