தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் நள்ளிரவில் காவல்நிலையம் மீது தாக்குதல், 12 காவலர்கள் காயம் - ஹூப்ளியில் 144 தடை உத்தரவு

கர்நாடகா மாநிலத்தில் சமூகவலைதளப் பதிவால் காவல்நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

karnataka-section-144-imposed-in-hubli-after-stone-pelting-at-police-station-injured-4-cops
karnataka-section-144-imposed-in-hubli-after-stone-pelting-at-police-station-injured-4-cops

By

Published : Apr 17, 2022, 8:18 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் குறிப்பிட்ட சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் நேற்று(ஏப்ரல் 16) சமூகவலைதளங்களில் வெளியாகியது. அந்த பதிவை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கணக்கானோர் ஹூப்ளி காவல்நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்றொரு தரப்பினரும் அங்கு வந்ததால், இருதரப்பினரிடையே வன்முறை வெடித்தது.

அப்போது ஒரு கும்பல் காவல்நிலையம் மீது சரமாரிய கல்வீசித் தாக்குதலில் நடத்தியது. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த தாக்குதலில், 12 போலீசார் காயமடைந்தனர். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக ஹூப்ளி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக அமைந்த சமூகவலைதளப்பதிவு குறித்து தனி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பதிவிட்டவரை கைது செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மோடி உண்மை பேச மாட்டார், பேசவும் விடமாட்டார்' - ராகுல் காந்தி தாக்கு

ABOUT THE AUTHOR

...view details