தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கே.ஜி.எப். காப்புரிமை மீறல் வழக்கு : ராகுல் காந்தி மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு! - கேஜிஎப் 2 ராகுல் காந்தி வழக்கு

கே.ஜி.எப் இரண்டாம் பாகம் படத்தின் பாடலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வீடியோவில் பயன்படுத்தியது தொடர்பாக ராகுல் காந்தி உள்பட 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Karnataka
Karnataka

By

Published : Jun 28, 2023, 4:47 PM IST

Updated : Jun 28, 2023, 6:16 PM IST

பெங்களூரு : ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் வீடியோவில் கேஜிஎப் -2 படத்தின் பாடலை பின்னணியாக பயன்படுத்தியது தொடர்பாக ராகுல் உள்பட 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி, கடைசியாக ஜம்மு காஷ்மீர் பயணத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றிவைத்து இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவுக்குக் கொண்டு வந்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ஆயிரக்கணக்கிலான மக்கள் ஆதரவு அளித்தனர்.

அவரது யாத்திரையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குடும்பத்தோடு கலந்து கொண்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முப்தி, அவரது மகள் இல்திஜா முப்தி, முப்தி முகமதி சயீத், அசோக் கெலாட், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் வீடியோக்களை காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் ஒரு வீடியோவில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள பாடல் பின்னணியாக வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் கட்சி தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் கே.ஜி.எப் -2 படத்தின் பாடலை பின்னணியாக பயன்படுத்ததி உள்ளதாக அந்த படத்தின் காப்புரிமைகளை பெற்றூ உள்ள எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உள்பட மூவர் மீது இந்த காப்புரிமை மீறல் புகாரை கொடுத்தது.

அதிகளவில் பணம் கொடுத்து கே.ஜி.எப் 2 படத்தின் பாடல் உரிமையை தாங்கள் வாங்கி உள்ளதாகவும், அதனை அனுமதியின்றி காங்கிரஸ் கட்சியினர் தங்களது வீடியோவில் பயன்படுத்தி உள்ளதால் நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஸ்ரீனேட் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார்.

அதேநேரம், இந்த வழக்கில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட 3 பேருக்கு டிசம்பர் வரை வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணம் தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க :சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சம்! நிப்டியும் புது உச்சம் தொட்டு வர்த்தகம்!

Last Updated : Jun 28, 2023, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details