தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2021, 4:57 PM IST

Updated : Jul 15, 2021, 7:06 PM IST

ETV Bharat / bharat

மேகதாது விவகாரம்: பிரதமரை சந்தித்கும் கர்நாடக முதலமைச்சர்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர்
கர்நாடக முதலமைச்சர்

கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டும் பணிகளை கர்நாடாக அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அணை கட்டக்கூடாது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங்கை இன்று (ஜூலை.15) டெல்லியில் சந்திக்கின்றனர்.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நாளை (ஜூலை.16) திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். அங்கு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேகதாது அணை கட்ட உடனடியாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பை அடுத்து எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:சிந்தியாவும் ஏர் இந்தியாவும் விற்பனைக்கு - சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

Last Updated : Jul 15, 2021, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details