டெல்லி: துருக்கியில் சிரியா எல்லையையொட்டிய காஜியன்டப் நகரில் கடந்த 6ஆம் தேதி அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவை ஏற்படுத்தின.
இருநாடுகளிலும் அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இருநாடுகளிலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பிணங்கள் மீட்கப்படுகின்றன.
இந்த பேரழிவில் இரு நாடுகளிலும் இதுவரை சுமார் எட்டாயிரம் பேர் பலியானதாக தெரிகிறது. நேற்றுவரை 6,000ஐ கடந்திருந்த பலி எண்ணிக்கை இன்று(பிப்.8) ஏழாயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் 2,032 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.