டெல்லி:ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, "எங்கள் பான் இந்தியா 5ஜி நெட்வெர்க்கை உருவாக்க, 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். நாடு முழுவதும் அதிவேகமாக செயல்படும் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள், அதாவது வரும் தீபாவளிக்குள், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நான்கு மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம்.