தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார் மீது பைக் மோதியதில் தீப்பற்றி விபத்து: 3 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்! - பிகார் மாநிலத்தில் கார் மீது பைக் மோதி விபத்து

பிகார் மாநிலம் மாதேபுராவில் கார் மீது பைக் மோதி ஏற்பட்ட விபத்தில், மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் மீது பைக் மோதியதில் தீப்பற்றி விபத்து
கார் மீது பைக் மோதியதில் தீப்பற்றி விபத்து

By

Published : Apr 28, 2022, 10:47 PM IST

மாதேபுரா:பிகார் மாநிலம், மாதேபுரா மாவட்டம் பத்ராஹா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 106-யில், நேற்று(ஏப்ரல் 27) இரவு ஒரு விழாவில் கலந்து கொண்டு மூன்று இளைஞர்கள் பைக்கில் திருப்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது எதிரில் வந்த கார் மோதியதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து பைக் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இந்தநிலையில் அவ்வழியாக எதேச்சையாக வந்த ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ், விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தார். விபத்து நடந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்க முயற்சித்தார்.

தீப்பற்றி எரிந்த வாகனங்கள்

இதையடுத்து, விபத்தில் சிக்கிய மூன்று இளைஞர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தவர்கள் சானுகுமார் (28), ரவிக்குமார் (28), சுமன் குமார் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் சங்கர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோன்ஹி கிராமத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பிய போது விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பரிதாபம்.. தஞ்சை தேர் விபத்தின் கோரம்...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details