ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில், ஜம்மு-ஶ்ரீநகர் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை நேற்று முன்தினம் இரவு (மே 19) இடிந்து விழுந்தது. சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த கனமழை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் மூன்று தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். நேற்று ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.