வாஷிங்டன்:காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார், இந்தியாவில் இருந்து வெளியேறி கனடாவில் வசித்து வந்தார். கனடா நாட்டின் குடியுரிமை பெற்றிருந்த அவர் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி அடையாளம் தெரியாத இருவர் சுட்டுக்கொலை செய்தனர்.
இந்தக் கொலையில் இந்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு (Agency) தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். மேலும், கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற்றவும் கனடா உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தின் உயர் அதிகாரிகளை வெளியேறும்படி இந்திய அரசு தெரிவித்தது.
இதனால், இரண்டு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்க விரும்பவில்லை எனவும் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புவதாகவும் அண்மையில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.