தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்ப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே தகராறு - போலீசார் விசாரணை! - ஜெய்ப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே தகராறு

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பலர் காயமடைந்ததையடுத்து காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

clash between two groups
clash between two groups

By

Published : Feb 14, 2021, 3:44 PM IST

ஜெய்ப்பூரில் இன்று(பிப்.14) இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராரில் இருபிரிவினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கற்களை வீசிக்கொண்டதில் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் காவல் ஆணையர் ராகுல் பிரகாஷ் மற்றும் காவல் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தகராரில் ஏரளமான வாகனங்களும்,வீட்டின் ஜன்னல்களும் சேதமடைந்தன. இதையடுத்து இந்த தகராறில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் எந்தவித அசாம்பாவிதமும் நிகழாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து. காங்கிரஸ் எம்.எல்.ஏ ரபீக் கான் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், ”ஆதர்ஷ் நகரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அங்கு பதற்றம் நிலவியது. உரிய நேரத்தில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தக் கலவரத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: மகளுக்கு வாக்களித்தவுடன் இறந்த தந்தை!

ABOUT THE AUTHOR

...view details