தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Aditya L1 : இஸ்ரோவுக்கு தொடர் வெற்றி.. ஆதித்யா எல்1 விண்கலத்தின் அப்டேட் என்ன?

Aditya L1 successfully undergoes 3rd manoeuvre : ஆதித்யா எல்1 விண்கலம் 3வது முறையாக புவி சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி அடுத்த கட்ட சுற்றுப்பாதைக்கு ஆதித்யா எல்1 விண்கலம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 10:25 AM IST

Isro
Isro

பெங்களூரு : ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3வது முறையாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி சுற்றுவட்ட பாதையில் ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்தி கொண்டு முயற்சியில் தொடரந்து ஈடுபட்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதல் சுற்றுவட்டப்பாதையில் ஆதித்யா எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்து செப்டம்பர் 5ஆம் தேதி இரண்டாவது சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் உயர்த்தப்பட்டது. மூன்றாவது கட்டமாக இன்று (செப். 10) மீண்டும் ஆதித்யா எல்1 விண்கலம் மீண்டும் புவி சுற்று வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. தற்போது 282*40225 கிலோ மீட்டர் என்ற சுற்றுவட்ட பாதையில் ஆதித்யா எல்1 விண்கலம் சீராக இயங்கி வருவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது.

அடுத்தகட்ட பணிகள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சூரியன் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ள ஆதித்யா எல்1 விண்கலம், சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் 1 புள்ளியில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டு உளல்து.

அங்கிருந்து சூரியனை கண்காணித்தும், கிரகணங்கள் மற்றும் மின்காந்த அலைக்கற்றுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டும் ஆதித்யா எல்1 விண்கலம் தகவல்களை அனுப்பும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நான்கு மாத காலமாக திட்டமிடப்பட்டு உள்ள ஆதித்யா எல்1 அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் 1 புள்ளியை அடையும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க :ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!

ABOUT THE AUTHOR

...view details