டெல்லி: 'மனதின் குரல் நிகழ்ச்சி' மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிகழ்ச்சி இன்று (நவ. 26) நடைபெற்றது. இதில், உரையாற்றி பிரதமர் மோடி கூறும் போது, "இந்தியாவில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாகப் பெரிய குடும்பங்களின் திருமணங்களை வெளிநாட்டில் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது. இதனால், நாட்டின் நிதி வெளியேறுவது அதிகரிக்கிறது. எனவே, இந்தியாவிலேயே திருமணங்களை நடத்த வேண்டும் எனவும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி திருமண நிகழ்வுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் தற்போது நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சி மூலம் ரூ. 5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியப் பொருட்களுக்கு முன்னுரிமையை மக்கள் அளிக்க வேண்டும்.
மேலும், திருமணம் என்ற தலைப்பு வரும் போது எனது இதயத்தின் வலியை என குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லாமல் யாருடன் சொல்ல முடியும். சில பெரிய குடும்பங்கள் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவது தேவையா? எனக் கேள்வி எழுப்பினார்.