தமிழ்நாடு

tamil nadu

இன்னும் 10 நாள்களில் தடுப்பூசி போடாவிட்டால்... தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

By

Published : Jun 18, 2021, 6:02 PM IST

புதுச்சேரி: அனைத்து நிறுவன உரிமையாளர்களும், பணியாளர்களும் பத்து நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், தொழில் நிறுவனங்கள் இயங்காத நிலை ஏற்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

இது பற்றி புதுச்சேரி மாநில தொழிலாளர் துறையின் ஆணையர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த பத்து நாள்களுக்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, புதுச்சேரியில் உள்ள தொழில் நிறுவன அதிபர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், உணவக ஊழியர்கள் - விடுதி, அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனில் குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் இயங்காத நிலை ஏற்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details