டெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,712 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
புதன்கிழமை (ஜூன்1) நாட்டில் 2,745 பேர் புதியதாக கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நாட்டின் தினசரி கோவிட் எண்ணிக்கை கடந்த சில மாதங்களை காட்டிலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக மே 9 அன்று ஒரே நாளில் 3,207 பேர் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து கரோனா தொற்று குறையத் தொடங்கியது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் 0.05 சதவீத நேர்மறை விகிதம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.