தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா-வியட்நாம் கடற்படை பயிற்சி: சீனாவுக்கு எதிராகப் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

இந்தியா-வியட்நாம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான முயற்சியாக, இந்திய கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ். கில்டன், வியட்நாமிய கடற்படையுடன் தென் சீனக் கடல் பகுதியில் பயிற்சி மேற்கொண்டது.

By

Published : Dec 28, 2020, 7:47 AM IST

Updated : Dec 28, 2020, 8:59 AM IST

இந்தியா-வியட்நாம் கடற்படை பயிற்சி
இந்தியா-வியட்நாம் கடற்படை பயிற்சி

டெல்லி: இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியாக இந்திய கடற்படை வியட்நாம் கடற்படையுடன் தென் சீனக் கடலில் பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்திவரும் நிலையில், இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாகஇந்திய கடற்படை தனது ட்வீட்டில், "இந்தியா-வியட்நாம் கடற்படைக்கு இடையேயான பாஸெக்ஸ் (PASSEX) ராணுவப் பயிற்சி டிசம்பர் 26, 2020 மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சி கடல்சார் இயங்குத்தன்மை, பரஸ்பர ராணுவப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது" என்று பதிவிட்டிருந்தது.

இந்தியா-வியட்நாம் கடற்படை பயிற்சி

மத்திய வியட்நாமில் இந்தாண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 டன் நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். கில்டான் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை, வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவானுடன், பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தினார். அப்போது இரு தரப்பினரும் கடல்சார் துறை உள்பட ஒட்டுமொத்த பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதியளித்தனர்.

தென் சீனக் கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடிவருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே உள்ளிட்ட பல ஆசியான் உறுப்பு நாடுகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துவருகின்றன.

இதையும் படிங்க:பாவப்பட்ட பாம்பு மனிதன் - உதவிக்கரம் நீட்டுமா தன்னார்வ அமைப்புகள்

Last Updated : Dec 28, 2020, 8:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details