தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் - ட்விட்டரில் இரங்கல்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

By

Published : Sep 9, 2022, 10:27 AM IST

லண்டன்:இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது ட்விட்டரில் பக்கத்தில், ‘இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவால், உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது. 7 தசாப்தங்களுக்கும் மேலாக அவர் தனது நாட்டையும் மக்களையும் வழி நடத்தியதினார். இங்கிலாந்து மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின் போது இரண்டாம் எலிசபெத் உடன் மறக்க முடியாத சந்திப்புகள் நடந்தன. அப்போது நான் அவரது மாட்சிமை கண்டு வியந்தேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் பிரதமர் மோடி, ‘ராணி இரண்டாம் எலிசபெத் அவரது மாட்சிமை மூலம் இந்த காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். தனது தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தை வெளிப்படுத்தினார். அவர் மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இங்கிலாந்து மக்களுடனும் உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்"இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு அந்நாட்டு மக்களுக்கும், அரச குடும்பத்துக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற ஆட்சியைக் கொண்டிருந்தார். அவருடைய நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடனும் கண்ணியத்துடனும் சேவை செய்தார்’ எனப் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், ‘ஐக்கிய ராச்சியத்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.

ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், இங்கிலாந்து மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரும் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:15 பிரதமர்களை கண்ட மகாராணி - யார் இந்த இரண்டாம் எலிசபெத்?

ABOUT THE AUTHOR

...view details