நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம்தெரிவித்திருந்தது. அதன்படி, நிவர் புயல் மீட்புப் பணிக்காக தக்சன் பாரத் தலைமையகத்தின் 22 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை, புதுச்சேரி, திருச்சி வந்துள்ளன. இவர்களுக்கென்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணம் வழங்க தயாராக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டன.
தமிழ்நாடு, புதுச்சேரி நிலவரங்கள் குறித்து மாநில மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள அலுவலர்களிடம் தொடர்புகொண்டு பாதிப்பு குறித்த நிலவரங்களை ராணுவ குழுக்கள் கேட்டறிந்தன. இந்தக் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பலத்த மழை, கடலோரப் பகுதிகளில் துணிச்சலுடன் மக்களுக்கு உதவி செய்தது.