தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நேபாள ராணுவத்திற்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா - நேபாள ராணுவத்திற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி வழங்கியது இந்தியா ராணுவம்

காத்மாண்டு: நேபாள ராணுவத்திற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசியை இந்திய ராணுவம் வழங்கியது.

நேபாள ராணுவத்திற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி
நேபாள ராணுவத்திற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி

By

Published : Mar 29, 2021, 10:56 PM IST

சர்வதேச அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் பரவும் உருமாறிய கரோனா வகைகளே வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்திய ராணுவம் சுமார் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு வழங்கியுள்ளது.

இந்தத் தடுப்பூசிகள் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நேபாள ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் நேபாளத்திற்கு 10 லட்சம் தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தடுப்பூசி பாதுகாப்பானதே’ - மருத்துவர்கள் சைக்கிள் பேரணி

ABOUT THE AUTHOR

...view details