தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லைப் பாதுகாப்பில் தயார் நிலையில் உள்ள ராணுவம்: தலைமை தளபதி ராவத்

நிலம், நீர், வான் என அனைத்து மட்டங்களிலும் நாட்டின் எல்லையை பாதுகாக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 14, 2020, 8:45 PM IST

CDS Rawat
CDS Rawat

17-ஏ ரக போர் கப்பல் அறிமுக விழா மேற்குவங்கத்தில் உள்ள கப்பல் கட்டுமானத்தளத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் எல்லைப் பிரச்னை குறித்து பேசினார்.

அதில், இந்தியாவின் வடக்கு எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பு செய்ய சீனா முயற்சி செய்தது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தை பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டாலும் நாட்டின் ராணுவ வீரர்கள் அதை உறுதியுடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

நிலம், நீர், வான் என அனைத்து மட்டங்களிலும் நாட்டின் எல்லைகளை பாதுகாக்க வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பாதுகாப்புத் துறையில் உற்பத்தியை பெருக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் சிறப்பானவை என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details