ஜி-20 நாடுகள் என்பது உலகின் பொருளாதாரத்தில் 90 விழுக்காட்டைக் கொண்டுள்ள 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு. 80 விழுக்காடு உலக வர்த்தகம், மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை என உலகின் பாதியைக் கொண்டிருக்கும் நாடுகளாகும்.
இந்த ஜி-20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில், சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அகிஸ் தலைமையேற்று நடத்தும் 15ஆவது ஜி-20 மாநாடு இந்தாண்டு வெற்றிகரமாக காணொலி வாயிலாக நடைபெற்றது. பிரதமர் மோடி உள்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.