தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 16, 2022, 9:54 AM IST

ETV Bharat / bharat

24 மணி நேரத்தில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

நாட்டில் புதிதாக 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேருக்கு புதிதாக கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid cases
Covid cases

டெல்லி: நாடு முழுக்க கரோனா பெருந்தொற்று வைரஸிற்கு 15 லட்சத்து 50 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் லட்சத்து 71 ஆயிரத்து 202 பேருக்கு புதிதாக கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், “கடந்த 241 நாள்களில் இல்லாத வகையில் நாட்டில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் 15 லட்சத்து 50 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தினந்தோறும் பாதிப்பு வீதம் 16.28 ஆக உள்ளது. வாராந்திர பாதிப்பு வீதம் 13.69 ஆக உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 743 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒமைக்ரான் பாதிப்பு வீதம் 28.17 சதவீதம் ஆக உள்ளது. ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 314 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 066 ஆக உள்ளது.

இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 70.24 கோடி கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16.65 கோடி கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குக் கரோனா பூஸ்டர் டோஸ்

ABOUT THE AUTHOR

...view details